கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ விக்னேஷ், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றால் பொதுமக்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை:

அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழக (தவெக) வேட்பாளர் விக்னேஷ் அபார வெற்றி பெற்று அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.



இந்நிலையில், கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்த விக்னேஷுக்கு தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் வகையில் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ், கிணத்துக்கடவு தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என உறுதியளித்தார். சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட தனிப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்த மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், கோவை மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியும் தனித்துவம் கொண்டது போல, கிணத்துக்கடவையும் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட முன்னேற்றமான தொகுதியாக மாற்றுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்பாக, மது மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாட்டை முழுமையாக ஒழிப்பதே தனது இலட்சியம் என கூறிய அவர், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றால், பொதுமக்களை திரட்டி காவல் நிலையத்தை முற்றுகையிடுவேன் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், நீண்டகாலமாக சர்ச்சையாக இருந்து வரும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்சினைக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆழியாறு அணையில் 59.65 அடி,...