கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் அடுத்த 15 நாட்களுக்குள் மூடப்பட உள்ளன.


கோவை : மக்கள் நலன் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு மக்கள் நலன் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள்மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 4,765 டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளை அடையாளம் காண அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், வழிபாட்டு தலங்கள் அருகே 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகே 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 255 கடைகள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து மொத்தம் 717 கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கோவை வடக்கு பகுதியில் 156 கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 128 கடைகளும் உள்ளன.

இதில் கோவை வடக்கு பகுதியில் 48 கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 21 கடைகளும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வருவதால், மொத்தம் 69 கடைகள் அடுத்த 15 நாட்களுக்குள் மூடப்பட உள்ளன.

மேலும், 1557, 1603, 1846 மற்றும் 1662 ஆகிய எண்களைக் கொண்ட 4 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 1662 என்ற எண்ணுடைய கடை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான முந்தைய ஆட்சிக்காலத்திலும், 2023ஆம் ஆண்டு. வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்ட 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...