அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை அரசாணைப்படி வைக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியார், அண்ணா மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை அரசாணைப்படி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கடந்த நான்கு ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மனுவில் தெரிவித்த அவர்கள், தமிழக அரசின் பொதுத்துறை அரசாணை எண் 47 (07.01.1978) மற்றும் அதன் தொடர்ச்சியான 1990-ஆம் ஆண்டு அரசாணையின்படி, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுக் கட்டிடங்களில் திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணா மற்றும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது.

ஆனால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுவரை அந்தப் புகைப்படங்கள் வைக்கப்படவில்லை என மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரனிடம் நேரில் புகைப்படங்கள் வழங்கப்பட்டு மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது “புரோட்டோகால் விதிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2025 செப்டம்பர் மாதத்திலும் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டதுடன் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டும் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் டாக்டர் அம்பேத்கர் புகைப்படங்கள் அரசு அலுவலகங்களில் முறையாக வைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“தமிழக வெற்றி கழகம் எந்த தலைவர்களை கொள்கைத் தலைவர்களாக அறிவித்ததோ, அவர்களது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க ஏற்கனவே அரசாணை உள்ளது” என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய், தனது கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்களை அரசாணைப்படி உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...