வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வனத்துறை தீவிர நடவடிக்கை.


Coimbatore: வால்பாறை மலைப்பகுதிக்கு செல்ல இ-பாஸ் அவசியம் என்ற நிலையில், இன்று ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் நீண்ட தூரம் பயணித்து வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள்.




சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வால்பாறைக்கு 750 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், இன்று ஆழியார் சோதனைச் சாவடியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் குவிந்தன.






இ-பாஸ் கட்டாயம் என வனத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்ததால், முன்கூட்டியே இ-பாஸ் பெறாத வாகனங்கள் சோதனைச் சாவடியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. பல மணி நேரம் பயணம் செய்து வந்த பயணிகள் மலைப்பகுதிக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.




வால்பாறை மலைப்பகுதியில் வாகன நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் வனத்துறையினர் ஆழியார் சோதனைச் சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.




வனத்துறை அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் இ-பாஸ் பெற்று வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு எந்த விதத்திலும் அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளனர். வார இறுதி நாட்களில் வால்பாறைக்கு செல்ல திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முன்கூட்டியே இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...