உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


Tiruppur: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள முரீது பாபா தர்காவில் 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது.



உரூஸ் கந்தூரி விழா என்பது இஸ்லாமிய சூபி ஞானிகளின் நினைவு நாளில் தர்காக்களில் கொண்டாடப்படும் புனித விழா ஆகும்



இந்த விழா கடந்த மாதம் 19ஆம் தேதி தாஹிர் ஷா வலியல்லாஹ் தர்கா வளாகத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வாக மவ்லீது ஒதப்பட்டு, இஸ்லாமிய பெரியவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஆன்மீக உரைகள் நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து கந்தூரி எனப்படும் அன்னதானம் நடைபெற்றது. மேலும் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ‘சந்தன உருஸ்’ நிகழ்வின் ஒரு பகுதியாக சந்தனக்குடம் முரீது பாபா தர்காவிற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு சந்தனம் மற்றும் தப்ரூத் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சைய்யத் சுல்தான் ஷா காதிரி (சஜ்ஜாதா நஷீன்), எம். மூசா, காதிரி, கா. அப்பாஸ், அசன் பாஷா, அபூபக்கர் உள்ளிட்ட உலமாக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...