கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 66 பார்ம். டி மற்றும் 17 எம்.பார்ம் மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்திய மருந்தியல் ஆணையத்தின் செயலாளர் டாக்டர் V. கலைசெல்வன் பட்டங்களை வழங்கினார்.


Coimbatore: கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் முனைவர் R. வசந்தகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் S. ராம் காந்த் தலைமை தாங்கினார்.



பட்டமளிப்பு விழாவில் இந்திய மருந்தியல் ஆணையத்தின் (IPC) செயலாளர் மற்றும் அறிவியல் இயக்குனர் டாக்டர் V. கலைசெல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 242 பி.பார்ம், 66 பார்ம். டி மற்றும் 17 எம்.பார்ம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். பல்கலைக்கழக மற்றும் GPAT தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும், மெடல்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.



சிறப்பு விருந்தினர் பேசுகையில் மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதில் மருந்தாளுனர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று வலியுறுத்தினார். மருந்தாளுனர்களின் தொழில்முறை பொறுப்பு குறித்தும் அவர் மாணவர்களுக்கு வழிகாட்டினார்.



இந்த விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் முருகையா, கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் மோகன், பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...