கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்து முகமூடி திருடர்கள் பீரோவை உடைக்க முயன்றபோது அண்டை வீட்டார் கண்டதும் தப்பியோடினர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் வெள்ளியங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து (வயது 45), அவரது மனைவி கௌசல்யா (வயது 40) மற்றும் மகள் கவிகா ஸ்ரீ (வயது 19) ஆகியோர் வசித்து வருகின்றனர். நாச்சிமுத்து தளவாய்பட்டினம் கிராமத்தில் மின்வாரிய துறையில் பணியாற்றி வருகிறார்.






நேற்று மாலை சுமார் 7 மணியளவில் நாச்சிமுத்து தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு தரிசனம் செய்யச் சென்றிருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பீரோ மற்றும் லாக்கரை உடைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார்.






திருடர்கள் முகமூடி அணிந்தவாறு தப்பியோடிய காட்சியை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், உடனடியாக நாச்சிமுத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதனை அறிந்து அவர் மற்றும் அவரது மனைவி கௌசல்யா வீட்டிற்கு விரைந்து சென்றபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே உள்ள பீரோ சேதப்படுத்தப்பட்டிருந்தது. முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்று தோல்வியடைந்தது தெரியவந்தது.






இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து தாராபுரம் போலீஸ் Inspector ராமச்சந்திரன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு முகமூடி கொள்ளையர்கள் விட்டுச்சென்ற ஆதாரங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.






இது குறித்து நாச்சிமுத்துவின் உறவினர் கொங்கு ரமேஷ் கூறுகையில், "தாராபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் சரியான ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற திருட்டு மற்றும் திருட்டு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இரவு நேரங்களில் போலீசார் முறையான ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட முயன்ற முகமூடி கொள்ளையர்களை விரைவில் பிடிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.




கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிந்தாபுரம் அருகே தோட்டத்துச் சாலையில் முகமூடி கொள்ளையர்கள் வயதான முதியவரை தாக்கி பணம் நகை கொள்ளையடித்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் நடைபெற்றுள்ள இந்த திருட்டு முயற்சி சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...