கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்து முகமூடி திருடர்கள் பீரோவை உடைக்க முயன்றபோது அண்டை வீட்டார் கண்டதும் தப்பியோடினர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் வெள்ளியங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து (வயது 45), அவரது மனைவி கௌசல்யா (வயது 40) மற்றும் மகள் கவிகா ஸ்ரீ (வயது 19) ஆகியோர் வசித்து வருகின்றனர். நாச்சிமுத்து தளவாய்பட்டினம் கிராமத்தில் மின்வாரிய துறையில் பணியாற்றி வருகிறார்.






நேற்று மாலை சுமார் 7 மணியளவில் நாச்சிமுத்து தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு தரிசனம் செய்யச் சென்றிருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பீரோ மற்றும் லாக்கரை உடைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார்.






திருடர்கள் முகமூடி அணிந்தவாறு தப்பியோடிய காட்சியை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், உடனடியாக நாச்சிமுத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதனை அறிந்து அவர் மற்றும் அவரது மனைவி கௌசல்யா வீட்டிற்கு விரைந்து சென்றபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே உள்ள பீரோ சேதப்படுத்தப்பட்டிருந்தது. முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்று தோல்வியடைந்தது தெரியவந்தது.






இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து தாராபுரம் போலீஸ் Inspector ராமச்சந்திரன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு முகமூடி கொள்ளையர்கள் விட்டுச்சென்ற ஆதாரங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.






இது குறித்து நாச்சிமுத்துவின் உறவினர் கொங்கு ரமேஷ் கூறுகையில், "தாராபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் சரியான ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற திருட்டு மற்றும் திருட்டு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இரவு நேரங்களில் போலீசார் முறையான ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட முயன்ற முகமூடி கொள்ளையர்களை விரைவில் பிடிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.




கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிந்தாபுரம் அருகே தோட்டத்துச் சாலையில் முகமூடி கொள்ளையர்கள் வயதான முதியவரை தாக்கி பணம் நகை கொள்ளையடித்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் நடைபெற்றுள்ள இந்த திருட்டு முயற்சி சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...