தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்த சந்திரசேகர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கியவர் தலைமறைவாகி உள்ளதால் அலங்கியம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில் தம்பி தனது அண்ணனை அருவாளால் வெட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அண்ணன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கியவர் தலைமறைவாகியுள்ளதால் அலங்கியம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்திரசேகர் (வயது 50). இவர் தற்போது ஆட்சியூர் சாலையில் உள்ள விநாயகபுரம் பகுதியில் தனது தம்பி சேனாதிபதியுடன் குடியிருந்து வருகிறார்.


நேற்று மாலை இருவரும் பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது கடும் சண்டையாக மாறியதில், ஆத்திரமடைந்த தம்பி சேனாதிபதி மறைத்து வைத்திருந்த அருவாளால் தனது அண்ணன் சந்திரசேகரை கழுத்து மற்றும் கை பகுதிகளில் வெட்டியுள்ளார். இதில் சந்திரசேகர் படுகாயமடைந்து ரத்தக்களரியில் சுருண்டு விழுந்தார்.


இச்சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக களத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த சந்திரசேகரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, அவரது நிலை தீவிரமானதால் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இச்சம்பவம் குறித்து அலங்கியம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணனை அருவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான தம்பி சேனாதிபதியை கைது செய்ய போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் இவ்வாறு இரத்தக்களரி சம்பவமாக மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து அலங்கியம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...