அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரமாக மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் இன்று அவிநாசியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.



அவிநாசி சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக தொடங்கிய ரோடு ஷோ, லிங்கேஸ்வரர் கோவில் தேர் நிலை வரை நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து மோகன் யாதவ் கலந்து கொண்டார்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், “அவிநாசி புனித பூமியில் வாக்கு கேட்டு வந்துள்ளேன். நாடு முழுவதும் நிலவும் எழுச்சியைப் போல இங்கும் எல்.முருகனுக்கு வாக்களியுங்கள். சாதாரண மக்கள் கூட பிரதமராகவும் அமைச்சராகவும் வரலாம். ஆனால் திமுகவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பதவிக்கு வர முடியும்,” என்றார்.



மேலும், “நமது பாரம்பரியம், கலாச்சாரம் கோவில்களில் உள்ளது. ஆனால் திமுக கோவில்களுக்கும் சனாதனத்திற்கும் எதிராக உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எல்.முருகன், “இது திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம். ஊழல், லஞ்சம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இரட்டை எஞ்சின் ஆட்சி அமைந்தால் 2-ஆம் கட்ட அத்திக்கடவு திட்டம் நிறைவேறும். அவிநாசி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும்,” என்றார்.



மேலும், “ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் பெற்றுத் தரப்படும். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவோம். மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும்,” என வாக்கு சேகரித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...