மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் அவசரகால கடன் உதவி வழங்க பொதுத்துறை வங்கிகளுக்கு பரிந்துரைக்குமாறு மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர். செயல்மூலதன உச்சவரம்பை 20 சதவீதம் உயர்த்தவும் கோரினர்.


Coimbatore: மூலப்பொருட்கள் விலை உயர்வால் தொழில் துறையினருக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பொதுத்துறை வங்கிகள் அவசரகால கடன் உதவி வழங்க அறிவுறுத்த வேண்டும் என, கோவையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.



இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் தொழில் துறையினர் கலந்தரையாடும் நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை கம்ப்ரஸர் தொழில் நிறுவன உரிமையாளர்கள் சங்கத்தினர், ரிசர்வ் வங்கி அதிகாரிகளிட‌ம் கோரிக்கை மனு அளித்து பேசினர்.

இதுகுறித்து கோவை கம்ப்ரஸர் தொழில் நிறுவனங்கள் சங்கத்தின்(COCIA) தலைவர் ரவீந்திரன் கூறும் போது, மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக உற்பத்தி துறை சார்ந்த தொழில் நிறுவனத்தினர் மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சனிக்கிழமை திருப்பூரிலும் அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை கோவையிலும் தொழில் துறையினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதிகாரிகளிடம் எங்கள் சங்கம் சார்பில் மனு அளித்து பேசினோம்.

மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள தொழில்துறையினருக்கு அவசர கால கடன் உதவி திட்டத்தை அமல்படுத்த பொதுத்துறை வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல கொரோனா நோய் தொற்று பரவல் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசரகால கடன் உதவி திட்டத்தை போல செயல் மூலதன(Working Capital)உச்சவரம்பை தற்காலிகமாக 20% உயர்த்த வேண்டும். தற்போது தொழில் துறையினர் பெற்றுள்ள கடன் உதவி திட்டங்கள் ஆண்டுதோறும் புதுப்பித்தல் என்ற நடைமுறை அமலில் உள்ள காரணத்தால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் நடைமுறை அமல்படுத்த வேண்டும்.

'என்பிஏ' என்று அறிவிக்கப்படும் நடைமுறை மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதங்களாக நீட்டிக்க வேண்டும். ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றம் செய்யும் போது வசூலிக்கப்படும் பிராசசிங் கட்டணம் முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் மனுவாக அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...