சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, “சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்காவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குங்கள்” என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.


கோவை: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சரும், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகருமான சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



பிரச்சாரத்திற்கு முன், வடவள்ளியில் அமைந்துள்ள முத்தப்பசாமி கோவிலுக்கு சென்ற சுரேஷ் கோபி மற்றும் வானதி சீனிவாசன் சிறப்பு வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனர்.

பின்னர் அங்கு திரண்டிருந்த மலையாளி மக்களிடம் உரையாற்றிய சுரேஷ் கோபி, வானதி சீனிவாசனை தனது சகோதரியாக குறிப்பிட்டு, அவரை மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.



தொடர்ந்து முத்தப்பசாமி கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு, வடவள்ளி மகாராணி அவென்யூ, காட்டு விநாயகர் கோவில் பகுதி, டாட்டா நகர் உள்ளிட்ட இடங்களில் சுரேஷ் கோபி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “வானதி சீனிவாசன் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றினார். மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக சட்டமன்றத்தில் தைரியமாக குரல் கொடுத்தார். சட்டமன்றத்தின் சிம்மக் குரலாக விளங்கிய வானதி அக்காவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்”, என்றார்.

மேலும், அவரைப் போன்ற பலர் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும். அதற்காக கோவை வடக்கு மக்கள் வானதி சீனிவாசனை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...