கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, கோவை வளர்ச்சி, தமிழ்நாட்டு உரிமைகள் மற்றும் கூட்டணி வெற்றி குறித்து உரையாற்றினார்.


கோவை: கோவை ராஜவீதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.



அப்போது பேசிய அவர், “அம்மன் குளம், கல்லுக்குழி, கெம்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களின் மனநிலையும் தேவைகளும் எனக்கு நன்கு தெரியும். இந்த தொகுதியில் நான் நடந்து செல்லாத இடமே இல்லை. செந்தில் பாலாஜியிடம் கூட ‘இது நம் தொகுதி’ என்று கூறியுள்ளேன். எனக்குக் கிடைத்த வாக்குகள் பணம் கொடுத்து வாங்கப்பட்டவை அல்ல; மக்களின் நம்பிக்கையால் கிடைத்தவை. அதேபோல் இந்த முறை செந்தில் பாலாஜிக்கும் மக்களின் ஆதரவு கிடைக்கும்,” என்றார்.



மேலும், “என் நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து முதல் திட்டமாக கோவை தெற்கு தொகுதிக்கே நிதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவையுடன் எனக்கு நீண்டநாள் உறவு உள்ளது. ஜி.டி. நாயுடு பெயரில் பாலம் அமைக்கப்பட்டது சரியான முடிவு,” என தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து, “தமிழக வளர்ச்சியைப் பற்றிய தரவுகள் வடக்கிலிருந்தே வருகிறது. 15 கட்சிகளை இணைக்கும் திறமை அனைவருக்கும் வராது. திமுகவை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு ஒரே முதலாளி தான்; அவர் வடக்கில் இருக்கிறார்,” என்றார்.

மேலும், “என் ஊருக்கு ஏன் மெட்ரோ வரவில்லை என்று கேட்கும் புத்திசாலித்தனமான மக்கள் கோவையில் உள்ளனர். பாட்னாவை விட தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை எந்த வகையிலும் குறைவானது இல்லை,” என்றும் கூறினார்.

செந்தில் பாலாஜியை பாராட்டிய அவர், “100 வார்டுகளில் 96 வார்டுகளை வெற்றி பெற்றவர் செந்தில் பாலாஜி. அந்த வெற்றி மீண்டும் தொடரும். முதல்வர் அவருக்கு கொடுத்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுவார். கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது,” என்றார்.

இறுதியாக, “கொங்கு மண்டலம் செழித்தால் தமிழகம் முழுவதும் செழிக்கும். இங்கு வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. வடவர் படையெடுப்பை முறியடிப்போம். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இது. உதயசூரியன் உங்கள் சின்னம்,” என்று வாக்கு சேகரித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...