கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில் வெளியிடப்பட்டது. கல்வி, ஆன்மிகம், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.


கோவை: தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை பதிவு செய்த Oceans of Knowledge நூல் வெளியீட்டு விழா, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.



இந்தியாவில் கடல்சார் ஆராய்ச்சி துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவராக டாக்டர் லால் மோகன் பரவலாக அறியப்பட்டவர்.தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகளில் உருவாக்கப்பட்ட Oceans of Knowledge நூலை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினர்.



நூலாசிரியரும், ஏ.ஜே.கே கல்வி நிறுவனங்களின் தலைவருமான முனைவர் அஜித்குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக அய்யாவழி சாமி தோப்பு பால பிரஜாபதி அடிகளார், ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனங்களின் சேர்பர்சன் முனைவர் நந்தினி ரங்கசாமி, கோவை திருமண்டல துணைத் தலைவர் மற்றும் செயலாளர் டேவிட் பர்னபாஸ், ஆர்த்தோ ஒன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் முனைவர் டேவிட் வி. ராஜன், மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு, சுஜாதா ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பேசியோர், கடல் உயிரியல், கடல்சார் வளங்கள் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் காக்கும் முயற்சிகள் உள்ளிட்ட துறைகளில் டாக்டர் லால் மோகன் செய்த பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர்.



கடல் உயிரினங்கள், கடல் சூழல் மற்றும் வளங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளில் சிறந்து விளங்கிய விஞ்ஞானியின் வாழ்க்கைப் பயணத்தை இந்த நூல் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.



கல்வி, ஆன்மிகம் மற்றும் சமூக முன்னேற்றத்தை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பல்வேறு துறைகளின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றதன் மூலம் சிறப்பு பெற்றது.

இறுதியாக, ஏ.ஜே.கே கல்வி நிறுவனங்களின் இயக்குனர் பிந்து அஜீத் நன்றி உரையாற்றினார்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...