பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்தனுக்கு, முழு ஆதரவு அளிப்பதாக தேவாங்க செட்டியார் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு.


Coimbatore: பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேவாங்க செட்டியார் சமூகத்தின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் பேசிய தேவாங்க செட்டியார் சமூக பிரதிநிதிகள், கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். குறிப்பாக, நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்கள், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளதாக கூறினர்.

இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்தியானந்தனுக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் முழு ஆதரவு அளிப்பதாக கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.



மேலும், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட உள்ளதாக தெரிவித்த அவர்கள், இந்த முறை திமுகவின் வெற்றிச் சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க உள்ளதாகவும் உறுதியளித்தனர்.

திமுக மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதி திமுக பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் நித்தியானந்தன், நகர்மன்ற தலைவர் சியாமளா, பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தேவாங்க செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.


Newsletter

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...