ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வேலாண்டிபாளையம், கோவை தெற்கு, மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார்.

Coimbatore:

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான விரிவான அட்டவணை திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். காங்கேயம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வேலாண்டிபாளையம், கோவை தெற்கு, மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார்.

காலை 9.30 மணிக்கு காங்கேயம் பகுதியில் தொடங்கும் பிரச்சாரம், தொடர்ந்து உடுமலைப்பேட்டை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெறும். பிற்பகலில் கிணத்துக்கடவு மற்றும் வேலாண்டிபாளையம் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெறும் நிலையில், மாலை நேரத்தில் கோவை தெற்கு மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் அவர் பொதுமக்களை சந்திக்கிறார்.

இரவு 7.30 மணியளவில் குன்னூர் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியுடன் அவரது பிரச்சார பயணம் நிறைவடைகிறது.

திமுக தலைமையின் அறிவுறுத்தலின்படி, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்படுவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அட்டவணை வெளியீடு கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேலும் வேகப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...