தொண்டாமுத்தூர் தொகுதி அலுவலகத்தில் Delimitation எதிர்ப்பு: திமுக கருப்புக்கொடி போராட்டம்

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூரில் மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகிகள் கருப்புக்கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் மற்றும் தென்மாநிலங்களுக்கு இழைக்கப்படும் வரலாற்று அநீதி என சாடியுள்ளனர்.


Coimbatore: மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் தொகுதி அலுவலகத்தில் திமுக கழக நிர்வாகிகள் இன்று கருப்புக்கொடி ஏற்றி கடும் கண்டனம் தெரிவித்தனர்.






தொண்டாமுத்தூர் தொகுதி அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் ஒன்று கூடி, மத்திய அரசின் Delimitation சட்டத்திருத்தத்திற்கு எதிராக கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டத்திருத்தம் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி என நிர்வாகிகள் கடுமையாக சாடினர்.






மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தி வெற்றிகரமாக பின்பற்றிய தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் இந்த ஆணவமிக்க போக்கை முறியடிக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் உரத்த குரலில் முழக்கங்கள் எழுப்பினர்.






மக்கள் தொகை கட்டுப்பாட்டில் பொறுப்புடன் செயல்பட்ட மாநிலங்களை தண்டிக்கும் இந்த நடவடிக்கை அரசியல் சட்ட விரோதமானது என்றும், கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானது என்றும் திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவதை எந்த விலை கொடுத்தும் ஏற்க முடியாது என்று உறுதியாக தெரிவித்தனர்.






பாஜக அரசின் இந்த Delimitation முடிவை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க அனைத்து தளங்களிலும் குரல் எழுப்ப வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் ஒருமனதாக முடிவெடுத்தனர். மாநில அரசுகளின் கருத்துகளை கேட்காமல் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்படும் இந்த முடிவுகள் ஜனநாயக விரோதமானவை என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Newsletter

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...