“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன், பிரதமரின் வார்த்தைகள் தனது லட்சிய உறுதியை மேலும் பலப்படுத்தியுள்ளதாக வீடியோ பதிவு மூலம் குறிப்பிட்டுள்ளார்.


Coimbatore: தமிழக பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் மோடி நிகழ்த்திய ‘எனது பூத், வலிமையான பூத்’ (Mera Booth, Sabse Mazboot Samvaad) கலந்துரையாடல் நிகழ்வு, தனக்குப் புதிய உத்வேகத்தையும் மனவலிமையையும் கொடுத்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் வார்த்தைகள் தனது லட்சிய உறுதியை மேலும் பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தச் சூழலிலும், பிரதமரின் ஊக்கமளிக்கும் பேச்சு தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஆழமாக விதைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், தனது உடல்நலம் குறித்து தொடர்ந்து விசாரித்து வரும் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், “உங்களின் பிரார்த்தனைகளுக்கும் ஆசிகளுக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...