கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூறிய பிரேம்குமார் என்பவரால் ரூ.45.50 லட்சம் மோசடி செய்யப்பட்டார். இவரது ஆதார் எண் பயன்படுத்தி கர்நாடகாவில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு தீவிரவாதிகளுக்கு பணம் அனுப்பப்பட்டதாக கூறி மிரட்டி பணம் பறித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை அருகே சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஸ் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (வயது 70), லக்னோவில் உள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறிய பிரேம்குமார் என்பவரால் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஸ் நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 70). இவர் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் அப் நம்பருக்கு பிரேம்குமார் என்பவர் தொடர்பு கொண்டார். அப்போது பிரேம்குமார், லக்னோவில் உள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறினார்.


அவர் குணசேகரனிடம், "உங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கர்நாடகாவில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளில் தீவிரவாத இயக்கத்திற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது" என்று கூறினார். இதை குணசேகரன் மறுத்தார்.


ஆனால் பிரேம்குமார் குணசேகரனை மிரட்டி பல்வேறு தவணைகளில் ரூ.45 லட்சத்து 50 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டார். அதன்பிறகு அந்த பணத்தை அவருக்கு திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக குணசேகரன் விசாரித்த பிறகுதான் பிரேம்குமார் மோசடி செய்தது தெரியவந்தது.


இதையடுத்து குணசேகரன் கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த மோசடி தொடர்பாக தற்போது விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடி செய்த பிரேம்குமாரைக் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...