கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங்கம் 30.03.2026 அன்று நடைபெற்று சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை குறித்து வலியுறுத்தப்பட்டது.


Coimbatore:

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் IQAC மற்றும் ஒளிரும் கோவை தன்னார்வ அமைப்பு இணைந்து “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் 30.03.2026 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், 50 ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவையை வெளியிட்டார்.

அவர் உரையாற்றும்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகர தூய்மை மிக முக்கியமானவை என்றும், கோவையை ஆரோக்கியமான நகரமாக மாற்ற அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும், தூய்மை குறித்து சிறுவயதிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்வில் முனைவர் சிஏ கைலாஷ் குமார் மற்றும் தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரிய உறுப்பினர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்த கருத்தரங்கிற்காக மாநிலம் முழுவதும் இருந்து 50 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கட்டுரைகள் வல்லுநர் குழுவின் முன்னிலையில் வழங்கப்பட்டன.

அவற்றில் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் தி சென்னை மொபைல்ஸ் நிறுவனர் ஏ.எம்.சம்சு அலி பரிசுகளை வழங்கினார்.

முதல் பரிசு ரூ.15,000 முனைவர் பி.நரசிம்மன், இரண்டாம் பரிசு ரூ.10,000 மாணவி வி.சண்முகபிரியா, மூன்றாம் பரிசு ரூ.5,000 மாணவிகள் எம்.மோகனா மற்றும் ஆர்.ஸ்ரீ லஷ்மி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்வை IQAC ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஒளிரும் கோவை அமைப்பினர் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...