MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்காளர் சங்க செயலாளர் ஜலபதி விளக்கம் அளித்துள்ளார்.

Coimbatore:

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகைகளை காலவரையறைக்குள் செலுத்தாதால், அந்த செலவுக்கான வருமான வரிச் சலுகை மறுக்கப்படும் அபாயம் உள்ளது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பட்டய கணக்காளர் சங்கத்தின் செயலாளர் ஜலபதி தெரிவித்துள்ளார்.

2025-26 நிதியாண்டு முடிவை முன்னிட்டு, வருமான வரிச் சட்டம் 43B(h) பிரிவின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். இந்த பிரிவு MSMED சட்டம், 2006-ன் பிரிவு 15-உடன் தொடர்புடையதாகும்.

ஒரு நிறுவனம் Micro அல்லது Small MSME நிறுவனத்திடம் இருந்து பொருட்கள் அல்லது சேவைகள் பெற்றிருந்தால், அதற்கான தொகையை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும். இல்லையெனில், அந்த செலவு அந்த ஆண்டில் வரிச் சலுகைக்காக அனுமதிக்கப்படாது; பணம் செலுத்தப்படும் ஆண்டில்தான் அதை கோர முடியும்.

ஒப்பந்தம் இருந்தால் விலைப்பட்டியல் தேதியிலிருந்து 45 நாட்களுக்குள், ஒப்பந்தம் இல்லையெனில் 15 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இந்த காலக்கெடு மீறப்பட்டால் வரிச் சுமை அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

இந்த விதி MSME பதிவு பெற்ற Micro மற்றும் Small நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். Medium நிறுவனங்களுக்கு இது பொருந்தாது. மேலும் வணிகர்கள் (Traders) மீது இந்த விதி அமலில்லை எனவும் விளக்கப்பட்டது.

உதாரணமாக, ஒரு நிறுவனம் ₹3,00,000 மதிப்பில் வாங்கிய பொருளுக்கான கட்டணத்தை மார்ச் 31, 2026க்குள் செலுத்தினால் அந்த செலவு FY 2025-26ல் ஏற்கப்படும். ஆனால் அதே தொகை ஏப்ரல் 2026ல் செலுத்தப்பட்டால், அந்த ஆண்டில் செலவாக ஏற்கப்படாது; வரிச் சுமை கூடும்.

இதனால், தொழில் முனைவோர் மார்ச் 31க்குள் MSME நிலுவைத் தொகைகளை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் MSME விற்பனையாளர்களின் Udyam பதிவு விவரங்களை சரிபார்த்து, நிலுவைத் தொகை பட்டியலை தயார் செய்து, கணக்குப் புத்தகங்களை புதுப்பித்து ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வரிச் சட்டங்கள் சிக்கலானவை என்பதால், தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப வருமான வரி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

மிலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்:ஆட்சியர் அறிவிப்பு

மிலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...