ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் சீமா அறிவித்தது. GST வரியை 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை விடுத்தனர்.


Coimbatore: மூலப்பொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலை 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 2025-ல் 10 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக பம்ப்செட் பொருட்கள் விலை 2025 அக்டோபர் மாதம் 10 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், நிலைமை சீரடையாத காரணத்தால் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை பம்ப்செட் விலை உயர்த்தப்படுவதாக சீமா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீமா தலைவர் மிதுன் ராமதாஸ் கூறுகையில், "ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில் பல்வேறு நாடுகளில் நிலையற்ற தன்மை காணப்படும் போதும், இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. பிரதமர் Narendra Modi-யின் நடவடிக்கை பாராட்டுக்குரியது" என்றார்.

"தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை தொழில் துறையினர் எதிர்கொள்ள பல்வேறு உதவிகள் மத்திய அரசு செய்து வரும் நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினை தொழில் துறையினருக்கு தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஒரு ஆண்டில் காப்பர் மூலப்பொருள் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூபாய் 850-லிருந்து, ரூபாய் 1,200 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் மற்ற மூலப்பொருட்களான ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்கள் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள 2025 அக்டோபர் மாதம் பம்ப்செட் விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது வரை இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத காரணத்தால் ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.

"பம்ப்செட் தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணவும், GST வரி விதிப்பு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மிதுன் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...