ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் சீமா அறிவித்தது. GST வரியை 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை விடுத்தனர்.


Coimbatore: மூலப்பொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலை 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 2025-ல் 10 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக பம்ப்செட் பொருட்கள் விலை 2025 அக்டோபர் மாதம் 10 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், நிலைமை சீரடையாத காரணத்தால் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை பம்ப்செட் விலை உயர்த்தப்படுவதாக சீமா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீமா தலைவர் மிதுன் ராமதாஸ் கூறுகையில், "ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில் பல்வேறு நாடுகளில் நிலையற்ற தன்மை காணப்படும் போதும், இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. பிரதமர் Narendra Modi-யின் நடவடிக்கை பாராட்டுக்குரியது" என்றார்.

"தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை தொழில் துறையினர் எதிர்கொள்ள பல்வேறு உதவிகள் மத்திய அரசு செய்து வரும் நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினை தொழில் துறையினருக்கு தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஒரு ஆண்டில் காப்பர் மூலப்பொருள் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூபாய் 850-லிருந்து, ரூபாய் 1,200 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் மற்ற மூலப்பொருட்களான ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்கள் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள 2025 அக்டோபர் மாதம் பம்ப்செட் விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது வரை இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத காரணத்தால் ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.

"பம்ப்செட் தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணவும், GST வரி விதிப்பு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மிதுன் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...