ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் சீமா அறிவித்தது. GST வரியை 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை விடுத்தனர்.


Coimbatore: மூலப்பொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலை 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 2025-ல் 10 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக பம்ப்செட் பொருட்கள் விலை 2025 அக்டோபர் மாதம் 10 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், நிலைமை சீரடையாத காரணத்தால் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை பம்ப்செட் விலை உயர்த்தப்படுவதாக சீமா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீமா தலைவர் மிதுன் ராமதாஸ் கூறுகையில், "ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில் பல்வேறு நாடுகளில் நிலையற்ற தன்மை காணப்படும் போதும், இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. பிரதமர் Narendra Modi-யின் நடவடிக்கை பாராட்டுக்குரியது" என்றார்.

"தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை தொழில் துறையினர் எதிர்கொள்ள பல்வேறு உதவிகள் மத்திய அரசு செய்து வரும் நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினை தொழில் துறையினருக்கு தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஒரு ஆண்டில் காப்பர் மூலப்பொருள் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூபாய் 850-லிருந்து, ரூபாய் 1,200 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் மற்ற மூலப்பொருட்களான ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்கள் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள 2025 அக்டோபர் மாதம் பம்ப்செட் விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது வரை இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத காரணத்தால் ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.

"பம்ப்செட் தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணவும், GST வரி விதிப்பு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மிதுன் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...