தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணியை தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.


Coimbatore: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran இன்று (23.03.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார். கோயம்புத்தூர் மாவட்டம், 118-கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெற்றது.





இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இப்பேரணியானது அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் துவங்கி தடாகம் சாலை வழியாக N.S.R சாலை சந்திப்பு வழியாக மீண்டும் அரசு தொழில்நுட்பக் கல்லூரியினை வந்தடைந்தது. இப்பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளம்பர பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.



முன்னதாக, கல்லூரி வளாகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கத்தினை மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்து, செல்ஃபி முகப்பில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.



இந்நிகழ்வுகளின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் நர்மதா, அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் Dr Manomani, உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி நகர திட்டமிடுநர் மகேந்திரன், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், உதவி பொறியாளர் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், சலைத், கமலக்கண்ணன், சரண்பாண்டியன், கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...