தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணியை தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.


Coimbatore: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran இன்று (23.03.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார். கோயம்புத்தூர் மாவட்டம், 118-கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெற்றது.





இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இப்பேரணியானது அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் துவங்கி தடாகம் சாலை வழியாக N.S.R சாலை சந்திப்பு வழியாக மீண்டும் அரசு தொழில்நுட்பக் கல்லூரியினை வந்தடைந்தது. இப்பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளம்பர பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.



முன்னதாக, கல்லூரி வளாகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கத்தினை மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்து, செல்ஃபி முகப்பில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.



இந்நிகழ்வுகளின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் நர்மதா, அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் Dr Manomani, உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி நகர திட்டமிடுநர் மகேந்திரன், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், உதவி பொறியாளர் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், சலைத், கமலக்கண்ணன், சரண்பாண்டியன், கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...