CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆகவும், ஆர்த்தோ ஒன் ஸ்பெஷாலிட்டி மையத்தின் இயக்குனர் கரோலின் ராஜன் Co-convenor ஆகவும் தேர்வு செய்யப்பட்டனர். மார்ச் 19ஆம் தேதி நடந்த நிகழ்வில் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Coimbatore: இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (CII) பெண்கள் பிரிவான Indian Women Network (IWN) கோவை மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மார்ச் 19ஆம் தேதி கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் நடந்த ஆண்டு விழாவில் இந்த தேர்வு நடைபெற்றது.

Richmond Talent Solutions நிறுவனத்தின் நிறுவனரான ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு பெண்கள் பிரிவின் கோவை மண்டல புதிய Convenor ஆக தேர்வு செய்யப்பட்டார். 2004ஆம் ஆண்டு முதல் தொழில் முனைவோராக தனது பயணத்தை தொடங்கிய இவர், கடந்த இரண்டு தசாப்தங்களாக தொழில்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறார்.


ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு தொழில்துறை மட்டுமின்றி சமுதாய முன்னேற்றத்திற்கும், குறிப்பாக கல்வித்துறை தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவரது தலைமையில் CII பெண்கள் பிரிவு கோவை மண்டலம் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Co-convenor பதவிக்கு கோவை ஆர்த்தோ ஒன் ஸ்பெஷாலிட்டி மையத்தின் இயக்குனர் கரோலின் ராஜன் தேர்வு செய்யப்பட்டார். மருத்துவத்துறையில் பணியாற்றும் இவர், விமானத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றிய பன்முக அனுபவம் கொண்டவர். இவரது பரந்த அனுபவம் பெண்கள் பிரிவின் செயல்பாடுகளுக்கு புதிய பரிமாணங்களை வழங்கும் என நம்பப்படுகிறது.


நிகழ்வில் பங்கேற்ற உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். CII பெண்கள் பிரிவு பெண் தொழில் முனைவோர் மற்றும் வணிக தலைவர்களுக்கு ஒரு முக்கியமான தளமாக செயல்பட்டு வருகிறது. கோவை மண்டலம் தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், அவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்கவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...