திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள காவுத்தம்பாளையம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும், உயர் மின் கோபுரம் திட்டத்தை சாலை ஓரம் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவுத்தம்பாளையம் கிராமம், குமரிக்கல்பாளையத்தில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி முழுவதும் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் விருதுநகர் முதல் திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையம் வரை 765 கிலோவாட் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை சாலை ஓரமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



காவுத்தம்பாளையம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் செய்து வருவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழர்களின் வரலாறு, பண்பாடு அழிவதற்கு மாவட்ட நிர்வாகம் துணை போகிறது. விவசாயிகளின் எதிர்ப்பை மீறி துணை மின் நிலையத்தையும் அமைக்க விடமாட்டோம், உயர்மின் கோபுரத்தையும் அமைக்க விட மாட்டோம். அதற்காக சிறை செல்லவும் தயார்," என்று தெரிவித்தனர்.

மேலும், "இந்தப் பகுதிகள் முழுவதும் அகழாய்வு ஆராய்ச்சி மேற்கொண்டால் பல வரலாற்றுச் செய்திகள் குறியீடுகளை மீட்டெடுக்க முடியும்," என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...