திருப்பூரில் குடிநீர் குழாய் உடைப்பு: லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது

திருப்பூர் கல்லூரி சாலை காவிளிபாளையத்தில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் உடைந்து மூன்று நாட்களாக தண்ணீர் வீணாகிறது. உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் சுமார் 13 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்க மூன்று கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், நான்காவதாக மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில், திருப்பூர் கல்லூரி சாலை காவிளிபாளையம் பகுதியில் இத்திட்டத்தின் குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக இந்த நிலை தொடர்வதால், அப்பகுதி வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பொதுமக்களை சிக்கனமாக தண்ணீர் பயன்படுத்த வலியுறுத்தும் மாநகராட்சி, இந்த குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து தண்ணீரை சேமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...