அவினாசி சாலையில் மழைநீர் வெளியேற்றும் பணியை ஆய்வு செய்த ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் அவினாசி சாலையில் மழைநீர் வெளியேற்றும் பணியை ஆய்வு செய்தார். சாலையோர வடிகால்களில் சிறு துளைகள் இடும் பணி குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் இன்று (17.10.2024) மத்திய மண்டலத்திற்குட்பட்ட அவினாசி சாலை பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில், சாலையின் இரு புறங்களிலும் உள்ள வடிகால்களின் பக்கவாட்டில் சிறிய அளவிலான துளைகள் இடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



ஆய்வின் போது, துளைகளிடும் பணியை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் தனபாலன் மற்றும் பிற மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...