கோவை அவிநாசி மேம்பாலம் மற்றும் காளீஸ்வரா மில் சாலை மேம்பாலத்தில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் அவிநாசி மேம்பாலம் அருகில் ரெடிமேடு சிறுபாலம் மற்றும் காளீஸ்வரா மில் சாலை மேம்பாலம் அருகில் மின் மோட்டார்கள் பொருத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.10.2024) மத்திய மண்டலத்திற்குட்பட்ட இரண்டு முக்கிய பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தார்.

முதலில், அவிநாசி மேம்பாலம் அருகில் உள்ள பிரதான சாலை ஆடிஸ் வீதி பகுதியில் தேங்கும் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் சுமார் 30 மீட்டர் நீளத்திற்கு வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறுபாலம் அமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



அடுத்ததாக, ஆணையாளர் காளீஸ்வரா மில் சாலை மேம்பாலம் அருகில் தேங்கும் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் புதிதாக 2 மின் மோட்டார்கள் பொருத்தப்படுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இங்கும் மின் மோட்டார்களை விரைவாக பொருத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



இந்த இரு பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் பணிகள் மழைக்காலத்தில் நீர் தேங்குவதைத் தடுக்கும் என்றும், பொதுமக்களின் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கும் என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு; இன்று முடிவுகள் அறிவிப்பு

கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 3,647 வாக்காளர்களில் 2,626 பேர் வாக்களித்தனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர...

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...