கோவை: 27-வது வார்டில் சாக்கடை சுத்தம் மற்றும் காய்ச்சல் சிறப்பு முகாம் - கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு

கோவை மாநகராட்சி 27-வது வார்டில் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர் அம்பிகா தனபால். பீளமேடு பகுதியில் காய்ச்சல் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 27-வது வார்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



பீளமேடு என்ஜிஆர் வீதி, இஎஸ்ஐ காம்பவுண்ட் பகுதி மற்றும் பூசாரி ராமசாமி வீதி பகுதிகளில் நடைபெற்ற சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் பார்வையிட்டார்.



சாக்கடைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறும், சாலையோரத்தில் உள்ள செடிகளை அகற்றுமாறும் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



கிரி அம்மன் கோயில் வீதி பகுதியில் தினசரி குப்பை வாங்கும் தள்ளுவண்டி சரியாக வருகிறதா என்பதை உறுதி செய்தார்.



குப்பைகள் முழுவதும் சேகரிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும், சாலையோரத்தில் உள்ள குப்பைகளை அகற்றுமாறும் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



இதே வார்டில் உள்ள பீளமேடு குறும்பர் வீதி பகுதியில், கோயமுத்தூர் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் நடத்தும் காய்ச்சல் சிறப்பு முகாமை கவுன்சிலர் அம்பிகா தனபால் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு மற்றும் முகாம் தொடக்க நிகழ்வுகள் அனைத்தும் அக்டோபர் 16 அன்று நடைபெற்றன.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...