கோவை மாவட்ட காவல் துறையின் மாதாந்திர குற்ற விவாதிப்புக் கூட்டம்: 100 காவலர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற விவாதிப்புக் கூட்டம் நடைபெற்றது. கடந்த மாத குற்றங்களை கையாண்ட 100 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற விவாதிப்புக் கூட்டம் நேற்று (அக்டோபர் 15) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்புப் பிரிவு காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருள் விற்பனை போன்ற குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களை திறம்பட செயல்பட்டு கைது செய்த மற்றும் அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 13 காவல் ஆய்வாளர்கள், 29 உதவி ஆய்வாளர்கள், 6 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 7 தலைமைக் காவலர்கள், 9 முதல் நிலைக் காவலர்கள், 36 காவலர்கள் என மொத்தம் 100 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் பேசிய கே.கார்த்திகேயன், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...