கோவை மாவட்ட காவல் துறையின் மாதாந்திர குற்ற விவாதிப்புக் கூட்டம்: 100 காவலர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற விவாதிப்புக் கூட்டம் நடைபெற்றது. கடந்த மாத குற்றங்களை கையாண்ட 100 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற விவாதிப்புக் கூட்டம் நேற்று (அக்டோபர் 15) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்புப் பிரிவு காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருள் விற்பனை போன்ற குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களை திறம்பட செயல்பட்டு கைது செய்த மற்றும் அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 13 காவல் ஆய்வாளர்கள், 29 உதவி ஆய்வாளர்கள், 6 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 7 தலைமைக் காவலர்கள், 9 முதல் நிலைக் காவலர்கள், 36 காவலர்கள் என மொத்தம் 100 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் பேசிய கே.கார்த்திகேயன், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...