கோவையில் நில மோசடி: அதிமுக எம்எல்ஏ, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் மீது புகார் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியால் பரபரப்பு

கோவை கீரணத்தம் பகுதியில் 7.9 ஏக்கர் நிலம் மோசடி செய்யப்பட்டதாக குடும்ப வாரிசுகள் புகார். அதிமுக எம்எல்ஏ, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர், ரியல் எஸ்டேட் நிறுவனர் மீது குற்றச்சாட்டு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சியால் பரபரப்பு.


கோவை: கோவை கீரணத்தம் பகுதியில் காளிகோனார் என்பவருக்கு சொந்தமான 7.9 ஏக்கர் நிலம் மோசடி செய்யப்பட்டதாக குடும்ப வாரிசுகள் புகார் அளித்துள்ளனர். இந்த நில மோசடியில் சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ஜெயராம், பாஜக முன்னாள் கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஸ்ரீவாரி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காளிகோனாரின் வாரிசுதாரர்கள் 30 பேர் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த நில மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தனர். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையிலும் அந்த நிலத்தை விற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

தங்கள் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, காளிகோனாரின் வாரிசுதாரர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர்.



அப்போது, வாரிசுதாரரான ஒரு பெண் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு அவரை தடுத்து, தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர்.



வாரிசுதாரர்கள் பேசுகையில், "உடனடியாக மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை நிலம் சம்பந்தமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடாத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.



மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் தெரியுமா என்று கேள்வி எழுப்பிய வாரிசுதாரர்கள், ஹிந்தியில் சத்தமாக தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அதிமுக எம்எல்ஏ கே.ஆர் ஜெயராம், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோரை திருடர்கள் என்று குற்றம்சாட்டிய அவர்கள், தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...