கோவையில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்

கோவை துடியலூர் அருகே வடமதுரை மற்றும் கேஸ் கம்பெனி பகுதியில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை மற்றும் கேஸ் கம்பெனி பகுதியில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.



வடமதுரையில் உள்ள எஸ்.எஸ் கமலேஷ் திருமண மண்டபத்தில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த கழக உறுப்பினர்களுக்கான கூட்டமும், கேஸ் கம்பெனி அருகே உள்ள தாரிகா மஹாலில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, எண்.4 வீரபாண்டி பேரூராட்சி, கோவை கூடலூர் நகராட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கான கூட்டமும் நடைபெற்றது.



இந்தக் கூட்டங்களில் கழக அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான ஓ.கே.சின்ராஜ், கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு கழக வளர்ச்சிப் பணிகள், மக்கள் பணிகள், அடையாள அட்டைகள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.வி.என்.ஜெயராமன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்தக் கூட்டங்களில் மருத்துவர் அணி செயலாளர் டாக்டர்.துரைசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன், மீனவர் அணி செயலாளர் ஜெகன், மகளிர் அணி செயலாளர் விமலா, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பூக்கடை ரவி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முதல் கூட்டத்தில் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூர் கழக செயலாளர் ஆனந்தன், டியூகாஸ் முன்னாள் துணைத்தலைவர் செல்வராஜ், குருடம்பாளையம் ஊராட்சித்தலைவர் டி.ரவி, அசோகபுரம் ஊராட்சித்தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டாவது கூட்டத்தில் இளைஞர் அணி இணை செயலாளர் சசிக்குமார், கோவை கூடலூர் நகராட்சி கழகச் செயலாளர் குருந்தாசலம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி கழகச் செயலாளர் ரகுநாதன், எண்:4 வீரபாண்டி பேரூராட்சி கழக செயலாளர் ராமதாஸ், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தனபால் உள்ளிட்ட பல்வேறு அளவிலான கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Newsletter

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...