கோவையில் பட்டாசு கடைகளில் லஞ்சம் வாங்குவோர் மீது புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

கோவை மாநகர காவல்துறை, பட்டாசு கடைகளில் அதிகாரத்தை பயன்படுத்தி லஞ்சம் வாங்குவோர் மீது புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளது. புகார்களின் ரகசியம் காக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகர காவல்துறை, தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகளில் லஞ்சம் வாங்குவோர் மீது புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளது.

கோவை மாநகர காவல்துறை தனது அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் இன்று (அக்டோபர் 15) வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவையில் உள்ள பட்டாசு கடைகளில் அரசு ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினர், அரசியல் கட்சியினர் மற்றும் சாதி/மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் யாரேனும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் அல்லது பரிசுப் பொருட்கள் பெற முயற்சித்தால், அது குறித்து புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.



இது தொடர்பான புகார்களை 81900-00100 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம் என்றும், புகார் அளிப்பவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பெறப்படும் புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது.

இந்த முயற்சி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...