கோவையில் பட்டாசு கடைகளில் லஞ்சம் வாங்குவோர் மீது புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

கோவை மாநகர காவல்துறை, பட்டாசு கடைகளில் அதிகாரத்தை பயன்படுத்தி லஞ்சம் வாங்குவோர் மீது புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளது. புகார்களின் ரகசியம் காக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகர காவல்துறை, தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகளில் லஞ்சம் வாங்குவோர் மீது புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளது.

கோவை மாநகர காவல்துறை தனது அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் இன்று (அக்டோபர் 15) வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவையில் உள்ள பட்டாசு கடைகளில் அரசு ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினர், அரசியல் கட்சியினர் மற்றும் சாதி/மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் யாரேனும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் அல்லது பரிசுப் பொருட்கள் பெற முயற்சித்தால், அது குறித்து புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.



இது தொடர்பான புகார்களை 81900-00100 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம் என்றும், புகார் அளிப்பவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பெறப்படும் புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது.

இந்த முயற்சி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...