கோவையில் ASFASM சங்கத்தின் மாநில மாநாடு: NIRF தரவரிசையில் இடம்பெற்ற கல்லூரிகளுக்கு விருது

கோவையில் ASFASM சங்கத்தின் ஒரு நாள் மாநில மாநாடு நடைபெற்றது. NIRF 2024 தரவரிசையில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருது வழங்கப்பட்டது. உயர்கல்வியின் தரம் மற்றும் NIRF மதிப்பீட்டு முறை குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் கிளப்பின் ஜிவி ஹாலில் ASFASMTN (Association of Self-financing Arts, Science & Mangement Colleges of Tamilnadu) சங்கத்தின் ஒரு நாள் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், NIRF (National Institutional Ranking Framework) 2024 தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

ASFASMTN சங்கத் தலைவரும் ஏஜேகே கல்லூரி தலைவருமான பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி, கற்பகம் உயர்கல்வி நிறுவன வேந்தர் முனைவர் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



முனைவர் அஜித் குமார் லால் மோகன் தனது உரையில், உயர்கல்வியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும், NAAC, NIRF போன்றவை கல்வி நிறுவனங்களுக்கு தர நிர்ணய அளவுகோல்களை வழங்குவதாகவும் குறிப்பிட்டார். கல்லூரிகள் தங்கள் தரவரிசையை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முனைவர் ராமசாமி NIRF தரவரிசை நடைமுறைகள் குறித்தும், புதிய கல்விக் கொள்கை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். முனைவர் கீதாலட்சுமி, NIRF தரவரிசையில் உள்ள ஒப்பீடுகள் மற்றும் அதன் சிக்கல்கள் குறித்து விளக்கினார்.

நிகழ்வின் இறுதியில், NIRF 2024 தரவரிசையில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, NIRF குறித்த பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...