மேட்டுப்பாளையம் நகராட்சியில் தூய்மை பணி குறைபாடு: அதிமுக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல்

மேட்டுப்பாளையம் நகராட்சியின் 22வது வார்டில் தூய்மை பணி குறைபாட்டை கண்டித்து அதிமுக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகளின் உறுதிமொழிக்குப் பின் போராட்டம் முடிவுக்கு வந்தது.


Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சியின் 22வது வார்டு பகுதியில் சரியான முறையில் தூய்மை பணி மேற்கொள்ளப்படாததை கண்டித்து அதிமுக கவுன்சிலர் ராஜேஷ் மற்றும் பொதுமக்கள் சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்பாராத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு பகுதியான பெருமாள் லே அவுட், ஜெகநாதன் லே அவுட், சுப்பம்மா லே அவுட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சரியான முறையில் தூய்மை பணி மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை எதிர்த்து, அந்த பகுதியைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் ராஜேஷ் மற்றும் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் சேர் போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பெருமாள் லே அவுட் இரண்டாம் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சாலைகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும், சாக்கடைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக தூய்மை பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை நியமித்துள்ளதாகவும், பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தனர். இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...