இலங்கையை சேர்ந்த கோவை டாம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியினர் கைது


ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான இலங்கையை சேர்ந்த நிறுவனமான டாம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அரசு 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதற்கு உலக நாடுகள், ஐக்கிய நாடுகளின் சபை உட்பட பல அமைப்புகள் இலங்கை அரசுக்கு கண்டணம் தெரிவித்திருந்தன.

ஆனால், இலங்கை அரசு மீது எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்காமல் ஐ.நா. சபை காலம் தாழ்த்தி வந்தது. இதனால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்காமல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனமான கோவையில் செயல்பட்டு வரும் டாம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை நிறுவனங்களை இந்தியாவிலிருந்து அகற்றப்போவதாகவும் கோஷங்களை எழுப்பியபடி பதாககைகளை கைகளில் ஏந்தி தமிழர் விடியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...