கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் மழைநீர் வடிகால், சாலை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு எம்எல்ஏ PRG. அருண்குமார் முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார் கலந்து கொண்டார்.



பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமியம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கஸ்தூரிநாய்க்கன்பாளையம் 1-வது வார்டு மருதமலை அடிவாரம் சிவசாமி விபூதி ஸ்டோர்ஸ் அருகில் ரூ.8,20,000 மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.



இதேபோல், கஸ்தூரிநாய்க்கன்பாளையம் வார்டு 11-ல் ரூ.6,70,000 மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.



நச்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சோமையனூரில் ரூ.14,00,000 மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடத்தப்பட்டது.



மேலும், பன்னீர்மடை ஊராட்சி, தாலியூர் N.A.M நகர் பகுதியில் ரூ.9,95,000 மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பெருந்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





இதனிடையே, பன்னீர்மடை ஊராட்சி, கஸ்தூரி நாயக்கன் புதூர் பகுதியில் நேற்று பெய்த மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை எம்எல்ஏ PRG. அருண்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த ஆய்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...