கோவை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தை கடத்த முயற்சி: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் கடத்தல் மிரட்டல் துண்டு சீட்டு கண்டெடுக்கப்பட்டது. விரிவான சோதனைக்குப் பின் வதந்தி என உறுதி செய்யப்பட்டு, விமானம் தாமதமாக புறப்பட்டது.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் கடத்தல் மிரட்டல் துண்டு சீட்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அக்டோபர் 13 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் 169 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமானத்துக்குள் கிடந்த ஒரு துண்டு சீட்டில் விமானத்தை கடத்தப் போவதாக எழுதப்பட்டிருந்தது.

உடனடியாக இண்டிகோ ஊழியர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் அளித்தனர். பாதுகாப்பு நடவடிக்கைக்காக விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஆகியோரும் அடங்குவர்.

பின்னர் அனைத்து பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. விமானமும் முழுவதுமாக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விரிவான சோதனைக்குப் பின்னர், மிரட்டல் துண்டுச் சீட்டு வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஒன்றரை மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணியளவில் விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...