கோவை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தை கடத்த முயற்சி: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் கடத்தல் மிரட்டல் துண்டு சீட்டு கண்டெடுக்கப்பட்டது. விரிவான சோதனைக்குப் பின் வதந்தி என உறுதி செய்யப்பட்டு, விமானம் தாமதமாக புறப்பட்டது.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் கடத்தல் மிரட்டல் துண்டு சீட்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அக்டோபர் 13 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் 169 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமானத்துக்குள் கிடந்த ஒரு துண்டு சீட்டில் விமானத்தை கடத்தப் போவதாக எழுதப்பட்டிருந்தது.

உடனடியாக இண்டிகோ ஊழியர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் அளித்தனர். பாதுகாப்பு நடவடிக்கைக்காக விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஆகியோரும் அடங்குவர்.

பின்னர் அனைத்து பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. விமானமும் முழுவதுமாக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விரிவான சோதனைக்குப் பின்னர், மிரட்டல் துண்டுச் சீட்டு வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஒன்றரை மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணியளவில் விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...