அன்னூர் அருகே அறுந்த மின் கம்பி: பொதுமக்கள் புகார் மீது மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்

அன்னூர் அருகே ஒன்னக்கரசம்பாளையம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசம்பாளையம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கரியாம்பாளையம் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியான ஒன்னக்கரசம்பாளையத்தில், சாலையூர் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மரம் முறிந்து விழுந்ததில், மின் வழித்தடத்தில் உள்ள ஒரு கம்பி 90 சதவீதம் அறுந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், அந்த பகுதி மக்கள் பொகலூர் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், மின்வாரிய அதிகாரிகளோ இதனை பொருட்படுத்தாமல், அந்த மின் கம்பி அறுந்துள்ள இடத்தில் உள்ள விவசாய தோட்ட உரிமையாளரே தனது சொந்த செலவில் சரி செய்து கொள்ள வேண்டும் என கூறியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், அரசுத்துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய சூழலில், மின்வாரிய அதிகாரிகளின் இந்த அலட்சியம் மனித உயிர்களை பறிக்கும் முன் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த ஊர் மக்கள் வெளியிட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துணை முதல்வர் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கூறும் நிலையில், மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொறுப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...