கோவை: அபார்ட்மெண்ட் குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலப்பு - குடியிருப்பாளர்கள் அவதி

கோவை கள்ளிமடையில் உள்ள அபார்ட்மெண்ட்டின் குடிநீர் தொட்டியில் மாநகராட்சி கழிவுநீர் கலந்ததால் குடியிருப்பாளர்கள் பாதிப்பு. அருகிலுள்ள வில்லா நிர்வாகத்தின் செயல்பாடு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட கள்ளிமடையில் உள்ள ஆகாஷ் வில்லா மற்றும் அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அபார்ட்மெண்ட்டின் குடிநீர் தொட்டியில் மாநகராட்சி கழிவுநீர் கலந்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வில்லா மற்றும் அபார்ட்மெண்ட்டுக்கு இடையே பொதுவான கழிவுநீர் குழாய் உள்ளது. வில்லா சட்டவிதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.



நேற்று இரவு பெய்த கனமழையால் மாநகராட்சி கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வில்லா அசோசியேஷன் நிர்வாகிகள் கழிவுநீர் செல்லும் வழியை அடைத்துவிட்டனர். இதனால் மழைநீர், கழிவுநீர் அனைத்தும் அபார்ட்மெண்ட்டுக்குள் புகுந்து, 4,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியில் கலந்தது.



இதனால் குடிநீர் மாசுபட்டுள்ளதாக அபார்ட்மெண்ட் அசோசியேஷன் தலைவர் கண்ணன் தெரிவித்தார். குடிப்பதற்கு வெளியிலிருந்து தண்ணீர் கேன்கள் வாங்கி குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வாந்தி வருவதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணைக்கு வந்தனர். ஆனால் அவர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பிரச்சனைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற அச்சத்தில் குடியிருப்பாளர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...