முரசொலி செல்வம் மறைவு: பல்சமய நல்லுறவு இயக்கம் இரங்கல்

முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் மறைவுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான குரலாக விளங்கிய முரசொலி செல்வத்தின் சேவைகளை அவர் பாராட்டியுள்ளார்.


தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினரும், பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவருமான ஹாஜி. ஜெ. முகமது ரஃபி, முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நீதியின் குரலாக, சமூக நீதிக்கான குரலாக ஒலித்த முரசொலி செல்வம் அவர்களின் புகழ் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும். மண்ணில் மறைந்தாலும் மனதில் நிரந்தரமாக வாழும் ஐயா முரசொலி செல்வம் அவர்களுக்கு புகழ் அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திராவிட இயக்கங்களின் பங்களிப்பை பாராட்டிய அவர், "மனித சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் நீங்க, சமத்துவம் தழைத்தோங்க களமாடியது திராவிட இயக்கங்கள். திராவிட இயக்கங்களின் சமூக செயல்பாடுகளையும், சமூக அவலங்களை அடியோடு ஒழிக்க ஓயாது ஒலிப்பது முரசொலி நாளிதழ்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முரசொலி செல்வத்தின் பங்களிப்பை விவரித்த அவர், "சமூக நீதி பத்திரிகையாளராக, திராவிட இயக்க எழுத்தாளராக திராவிட முன்னேற்றக் கழகம் கண்ட மகத்தான ஆளுமையாக விளங்கினார். மொழிப்போரில் முன் நின்ற, முன்னாள் சட்டக் கல்லூரி மாணவர் அமைப்பின் தலை சிறந்தவர்களில் ஒருவரான முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம், 'சர்க்காரியா கமிஷன் - ஒரு சூழ்ச்சி வலை', 'சில நினைவலைகள்' போன்ற நூல்களை எழுதி உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியவர்" என்று பாராட்டியுள்ளார்.

இறுதியாக, "மீளா துரயரில் ஆழ்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் குடும்பத்தாருக்கும், முரசொலி குழுமத்துக்கும், திராவிட இயக்கங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலக தமிழ் நெஞ்சங்களுக்கும் பல்சமய நல்லுறவு இயக்கம் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து, கண்ணீருடன் புகழ் அஞ்சலியை காணிக்கையாக்க விளைகின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...