மோசமான வானிலையால் துபாய் - கோழிக்கோடு விமானம் கோவையில் அவசர தரையிறக்கம்

துபாயில் இருந்து கோழிக்கோடு செல்லும் 'பிளை துபாய்' விமானம், கோழிக்கோட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


கோவை: துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு இன்று (அக்டோபர் 12) காலை சென்று கொண்டிருந்த 'பிளை துபாய்' நிறுவனத்தின் விமானம், மோசமான வானிலை காரணமாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, விமானம் அரை மணி நேரத்துக்கும் மேலாக காற்றில் சுற்றியது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

விமானம் இன்று அக்டோபர் 12 காலை 7.45 மணிக்கு கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. வானிலை சீரடைந்த பின்னர் விமானம் கோழிக்கோடுக்கு புறப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...