ஆயுதபூஜை: பல்லடம் வனாலயத்தில் சிறப்பு வழிபாடு - வான்மழையுடன் துவங்கிய நிகழ்வு

பல்லடம் வனாலயத்தில் ஆயுதபூஜை திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. வனம் இணைசெயலாளர் K.M.ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அலுவலர்கள், தோட்டப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: பல்லடம் வனாலயத்தில் ஆயுதபூஜை திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. 11.10.2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இந்த நிகழ்வு வான்மழையின் ஆசீர்வாதத்துடன் துவங்கியது.



வனம் இணைசெயலாளர் K.M.ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வனப்பிள்ளையாரை வழிபாடு செய்தனர்.



மேலும், வனங்களை உருவாக்குவதற்கான மரக்கன்றுகள், கருவிகள், மற்றும் வாகனங்களுக்கும் பூஜை செய்து வணங்கினர்.



இந்த சிறப்பு பூஜையில் வனம் அமைப்பின் அலுவலர்கள், தோட்டப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவரும் இயற்கை வளம் பெருக வேண்டி வழிபாடு செய்தனர்.

நிகழ்ச்சியை SKY PA B.பன்னீர்செல்வம் ஒருங்கிணைத்தார். பல்லடம் 'வனம்' அமைப்பின் சார்பில் இந்த ஆயுதபூஜை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...