ஆயுத பூஜை: அன்னூர் கருப்பராயர் கோவிலில் வாகனங்களுக்கு சிறப்பு வழிபாடு

அன்னூர் காக்காபாளையம் மேடு உதயமரத்து கருப்பராயர் கோவிலில் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வாகன உரிமையாளர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். வாகனங்களுக்கு வாழைமரம் கட்டி, விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்ற காக்காபாளையம் மேடு உதயமரத்து கருப்பராயர் கோவிலில் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.



அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் புதிதாக வாகனங்களை வாங்குவோர் இந்த கோவிலில் பூஜை செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல தொலைதூரம் பயணிக்கும் கால் டாக்ஸிகள், கனரக வாகனங்களை இங்கு நிறுத்தி ஓட்டுநர்கள் வழிபட்டுச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.



இங்கு வாகனங்களை நிறுத்தி வழிபட்டால் பயணம் எந்தவித தடங்களும் இன்றி சிறப்பாக இருக்கும் என்பது ஓட்டுநர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆயுத பூஜை தினமான இன்று (அக்டோபர் 11) கருப்பராயர் கோவிலில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு வாழைமரம் கட்டியும், விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து வாகன உரிமையாளர்கள் வழிபட்டு வருகின்றனர்.

மேலும், வாகனங்களின் சாவிகளை கருப்பராயர் முன் வைத்து கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைத்து வழிபட்டு செல்கின்றனர். கருப்பராயருக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...