கிணத்துக்கடவில் கொண்டைக்கடலை விதைக்கு 50 சதவீதம் மானியம்: வேளாண் துறை அறிவிப்பு

கிணத்துக்கடவு வட்டாரத்தில் கொண்டைக்கடலை சாகுபடிக்கு 50 சதவீதம் மானியத்தில் விதைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் வேளாண் துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் ஆண்டுதோறும் 100 ஹெக்டேர் அளவில் கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மழை பொழிவு குறைந்ததால் 30 ஹெக்டேர் வரை மட்டுமே கொண்டைக்கடலை சாகுபடி இருந்தது.

ஜக்கார்பாளையம், பொள்ளாச்சி வடக்கு பகுதிகளில் கொண்டைக்கடலை சாகுபடி அதிகப்படியாக இருக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் பட்சத்தில் 100 ஹெக்டேர் அளவை பூர்த்தி செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடியை துவங்கலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

கொண்டைக்கடலை விதை, ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா போன்ற திரவ உயிர் உரங்கள் மற்றும் பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்டங்கள் ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு கொண்டைக்கடலை விதை வழங்க தேவையான அளவு வேளாண் துறை அலுவலகத்தில் இருப்பு உள்ளது.

விதைகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண் துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் அக்டோபர் 10 அன்று தெரிவித்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...