கிணத்துக்கடவில் கொண்டைக்கடலை விதைக்கு 50 சதவீதம் மானியம்: வேளாண் துறை அறிவிப்பு

கிணத்துக்கடவு வட்டாரத்தில் கொண்டைக்கடலை சாகுபடிக்கு 50 சதவீதம் மானியத்தில் விதைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் வேளாண் துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் ஆண்டுதோறும் 100 ஹெக்டேர் அளவில் கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மழை பொழிவு குறைந்ததால் 30 ஹெக்டேர் வரை மட்டுமே கொண்டைக்கடலை சாகுபடி இருந்தது.

ஜக்கார்பாளையம், பொள்ளாச்சி வடக்கு பகுதிகளில் கொண்டைக்கடலை சாகுபடி அதிகப்படியாக இருக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் பட்சத்தில் 100 ஹெக்டேர் அளவை பூர்த்தி செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடியை துவங்கலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

கொண்டைக்கடலை விதை, ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா போன்ற திரவ உயிர் உரங்கள் மற்றும் பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்டங்கள் ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு கொண்டைக்கடலை விதை வழங்க தேவையான அளவு வேளாண் துறை அலுவலகத்தில் இருப்பு உள்ளது.

விதைகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண் துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் அக்டோபர் 10 அன்று தெரிவித்தனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...