தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு கோவையில் இருந்து எட்டு மாணவர்கள் தேர்வு

கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு கோவையில் இருந்து எட்டு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்.


Coimbatore: கொல்கத்தாவில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மையத்தில் பயிற்சி பெற்ற எட்டு மாணவ, மாணவியர் தேர்வாகியுள்ளனர்.

இந்த தேசிய போட்டிக்கான தகுதி தேர்வு ஈரோடு கரட்டுப்பாளையம் அரசுப் பள்ளியில் அக்டோபர் 9 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் இருந்து 120 பேர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மையத்தில் பயிற்சி பெற்ற 15 பேர் பங்கேற்றனர்.

தேர்வாகியுள்ள எட்டு மாணவர்களின் விவரம் பின்வருமாறு:

1. கோவை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த ரியாஸ்ரீ

2. கோவை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த ரேச்சல்

3. கோவை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த சரண் பிரியா

4. ஸ்டேன்ஸ் பள்ளியின் பாகித் அகமத்

5. ஸ்டேன்ஸ் பள்ளியின் ஜாய் ஆன்ட்ரியா

6. அவிலா கான்வென்டைச் சேர்ந்த அக்ஷரா

7. சபர்பன் பள்ளியின் மோனிகா

8. சபர்பன் பள்ளியின் மவுனேஷ்

இந்த மாணவர்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளர் சையத் இப்ராஹிம் ஆவார். தேர்வான மாணவர்களையும் பயிற்சியாளரையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் அருணா மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்தன் ஆகியோர் பாராட்டினர்.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...