காரமடை அருகே இஸ்லாமிய பாடசாலையில் லேப்டாப் திருட்டு: இரு நபர்கள் கைது

கோவை மாவட்டம் காரமடை அருகே வெண்மணி நகரில் உள்ள இஸ்லாமிய பாடசாலையில் லேப்டாப் திருட்டு நடந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இரு நபர்களை கைது செய்து திருடப்பட்ட லேப்டாப்பை மீட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் காரமடை அருகே வெண்மணி நகரில் உள்ள இஸ்லாமிய பாடசாலையில் லேப்டாப் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெண்மணி நகரில் இயங்கி வரும் இஸ்லாமிய பாடசாலையின் பொறுப்பாளராக முகமது நிவாஸ் பணியாற்றி வருகிறார். கடந்த எட்டாம் தேதி பாடசாலையை மூடிவிட்டு சென்ற அவர், மறுநாள் காலை திரும்பி வந்தபோது, பாடசாலையின் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த விலையுயர்ந்த லேப்டாப் திருடப்பட்டிருப்பதை கண்டறிந்தார்.

உடனடியாக முகமது நிவாஸ் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் பாடசாலையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஊட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கோவை மத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து திருடப்பட்ட லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காரமடை போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...