ஆயுதபூஜை விடுமுறை: கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்

ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் உள்நாட்டு விமான சேவைகளின் கட்டணம் அக்டோபர் 10 அன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.11,000 வரை அதிகரித்துள்ளது.


கோவை: ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் உள்நாட்டு விமான சேவைகளின் கட்டணம் இன்று (அக்டோபர் 10) அதிரடியாக உயர்ந்துள்ளது.

நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக இருப்பதால் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்படத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே பேருந்துகள், ரயில்கள் நிரம்பி வழியும் நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமான சேவைகளின் டிக்கெட்டும் அதிகரித்துள்ளது.

சென்னை - கோவை விமான கட்டணம் ரூ.3,300 என்ற அளவில் இருந்து வந்த நிலையில் தற்போது ரூ.11,000 வரை உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ரூ.5,000 வரை இருந்து வந்த கட்டணம் தற்போது ரூ.11,700 வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...